சமூகம்

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அம்புலுவாவ (Ambuluawa) பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கம்பளை (Gampola) உடபலத்த பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமது திட்டத்திற்கு அதிகாரிகளால் இடையூறு ஏற்படுவதாக தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button