சமூகம்

மீன் பிடிக்க சென்று முதலையிடம் சிக்கிய பெண்! தேடுதல் பணிகள் தீவிரம்

அம்பாறை - சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்று காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (14) மாலை மீன் பிடிக்கச் சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற நிலையில் இதுவரை அப்பெண்ணோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்பதற்காக சவளக்கடை காவல்துறையினருடன் இணைந்து கல்முனை கடற்படையினரின் படகும், சுழியோடிகளும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (14)  அம்பாறை (Ampara) மாவட்டம் சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button